கவிதை
இயற்கை அன்னை
வானிலே கண்சிமிட்டும் வண்ணமிகு விண்மீன்கள்
வயற்காட்டு வரப்பினிலே வணங்கி நிற்கும் நெற்கதிர்கள்
காற்றின் தழுவலாலே கரை கடக்கும் கடலலைகள்
காலை கதிரவன் தினம் கண்விழிக்கும் தியானங்கள்
அதிகாலை புலர்ந்திடும் அழகான சோலைப் பூக்கள்
பனித்துளி பளிங்குகள் படர்ந்திடும் புல்தரைகள்
பல நூறு வண்ணத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சி
சூழ்கொள்ளும் தேனீக்கள் ஸ்வரம் பாடும் ரீங்காரம்
அருவியின் சிதறல் சத்தம் அடிவாரத்தில் கேட்கும் தாலாட்டு
கரைபுரளும் ஆற்றினிலே நடைபயிலும் கொண்டை மீன்கள்
அந்தி வேளைக் களிப்பினிலே ஆடி அகவும் தோகை மயில்
குதூகலத்துடன் குருவிகள் கூட்டமாய் எழுப்பும் கூக்குரல்கள்
கோடைமழையின் குளிர்ச்சாரல் வட்டமிடும் வானவில்
தவிட்டுத் தூரல் தணிந்தபின் வீசும் மண்வாசம்
தாழப்பறக்கும் தட்டாம் பூச்சி - தாழம்பூ வாசம்
தண்ணீரில் தவளை சத்தம் - காட்டுக் குயிலின் சத்தம்
இயற்கையின் இயக்கத்தில் இயங்கிடும் இவுலகில்
இத்துனை கொடைகள் ஈடில்லா இன்பங்கள்
வளமனைத்தும் பெருகக் கொண்டு வடிவமைத்தான் வையகத்தை
இந் நிலமனத்தும் மானுடத்தை நிலைபெறச் செய்யும்முன்னே
இறைவனின் பரிசுகளில் இதை மிஞ்ஜி வேறும் உண்டோ
இனியதனை உணர்ந்திடுவோம் இன்புறவே வாழிந்திடுவோம்
வானிலே கண்சிமிட்டும் வண்ணமிகு விண்மீன்கள்
வயற்காட்டு வரப்பினிலே வணங்கி நிற்கும் நெற்கதிர்கள்
காற்றின் தழுவலாலே கரை கடக்கும் கடலலைகள்
காலை கதிரவன் தினம் கண்விழிக்கும் தியானங்கள்
அதிகாலை புலர்ந்திடும் அழகான சோலைப் பூக்கள்
பனித்துளி பளிங்குகள் படர்ந்திடும் புல்தரைகள்
பல நூறு வண்ணத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சி
சூழ்கொள்ளும் தேனீக்கள் ஸ்வரம் பாடும் ரீங்காரம்
அருவியின் சிதறல் சத்தம் அடிவாரத்தில் கேட்கும் தாலாட்டு
கரைபுரளும் ஆற்றினிலே நடைபயிலும் கொண்டை மீன்கள்
அந்தி வேளைக் களிப்பினிலே ஆடி அகவும் தோகை மயில்
குதூகலத்துடன் குருவிகள் கூட்டமாய் எழுப்பும் கூக்குரல்கள்
கோடைமழையின் குளிர்ச்சாரல் வட்டமிடும் வானவில்
தவிட்டுத் தூரல் தணிந்தபின் வீசும் மண்வாசம்
தாழப்பறக்கும் தட்டாம் பூச்சி - தாழம்பூ வாசம்
தண்ணீரில் தவளை சத்தம் - காட்டுக் குயிலின் சத்தம்
இயற்கையின் இயக்கத்தில் இயங்கிடும் இவுலகில்
இத்துனை கொடைகள் ஈடில்லா இன்பங்கள்
வளமனைத்தும் பெருகக் கொண்டு வடிவமைத்தான் வையகத்தை
இந் நிலமனத்தும் மானுடத்தை நிலைபெறச் செய்யும்முன்னே
இறைவனின் பரிசுகளில் இதை மிஞ்ஜி வேறும் உண்டோ
இனியதனை உணர்ந்திடுவோம் இன்புறவே வாழிந்திடுவோம்

1 Comments:
At 7:32 AM,
கீதா சாம்பசிவம் said…
தொடர்ந்து எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு? அப்புறம் ஏன் வரதில்லை? ஒரு வேளை ராமாயணம் பிடிக்காதோ????????????????
Post a Comment
<< Home