market passion

Saturday, April 12, 2008

ஏமாற்றியது யார் - Part 2

ஏப்ரல் 13. சித்திரை பிறந்தது. பக்கத்து வீட்டு கோமதி புதுப்புடவையை கட்டிக்கொண்டு, "பரிமளா! நீயும் புதுசைக் கட்டிக்கோயேன், ரெண்டு பேருமா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்" என்றாள். "இந்த நீல புடவை எனக்கு எவ்வளவு அழகா இருக்கு! 500 ரூபாய் கிழிஞ்ஜது கூட எனக்கு நல்லதாப் போச்சு" என்று மனசு பெருமைப்பட்டது.

கோவில் உட்பிரகாரத்தில் காலை வைக்கும் போது கீழே டைல்ஸில் இருந்த தண்ணீரை பாராமல் காலை வைக்க பாலன்ஸ் தவறி கையில் விளக்கேற்ற கொண்டு வந்த எண்ணை புடவையில் சிந்தியது.பரிமளாவுக்கு அழுகை முட்டியது. "சீயக்காய்த் தேய்த்து கழுவினால் போய்டும்" - கோமதி சமாதானப் படுத்தினாள். விட்டுக்குப் போனதும் கொஞ்ஜம் சீயக்காயும், சோப்பும் போட்டு எண்ணை பட்ட இடத்தில் தேய்த்தாள். அவ்வளவுதான். "அய்யோ! என்னங்க! புடவை எப்படி சாயம் கொட்டுது பாருங்களேன்! நீல சாயம் முழுக்க பார்டரில் இறங்கிடுச்சு பாருங்க! படுபாவி! அந்த புடவைக்காரன் நம்பள நல்லா ஏமாத்திட்டாங்க" என்றாள் மனம் நொந்தபடி.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home