market passion

Tuesday, January 29, 2008

ஸ்டோரி டிஸ்கஷன் - part 2

உடனே ஹீரோயின் நீங்கள் பொருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி, நானும் உங்களுடன் வருகிறேன் அன்று கிளம்புகிறாள். அவர்களுக்கு ஒரு குருவியும் பல்லியும் உதவி செய்கின்றன.

தயாரிப்பாளர்: என்னது குருவியும் பல்லியுமா??

க.கபிலன்: பின்ன என்ன சார்! எவ்வளவு நாள்தான் நாய்,ஆடு,பாம்பு,யானை இவைகளையே வச்சு எடுக்கறது.

டைரக்டர்: சரி அதுவும் கொஞ்ஜம் வித்தியாசமாதான் இருக்கு, மேலே போங்க.

க.கபிலன்:ஒரு நாள் மந்திரிய தொடர்ந்து போய், ஹீரோ அவங்க கோட்வுன்ல மாட்டிகிறார். அவர சங்கிலில கட்டி போட்டு, " நீ உங்க அம்மா மகன் தானே, சொல்லுன்னு மிரட்டறாங்க. ஆனா ஹீரோவோ " நீங்க எவ்வளவு அடிச்சாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" ங்கறான். ஏன்னு கேட்டா "எனக்கு கேள்வியே புரியல்லயே" ங்கறான்.சரி இவன் உண்மைய ஒத்துக்கமாட்டான்னு சொல்லி மந்திரி அவனை சுட தயாராகறார்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, சஸ்பென்ஸ் தாங்கல்லையா, சீக்கிரம் சொல்லு,

க.கபிலன்: சார் கதை கேக்குற உங்களுக்கே இப்பிடி இருந்தா, மியூசிக்கோட இந்த ஸீன் படத்துல எப்படி இருக்கும் கொஞ்ஜம் யோஜிச்சு பாருங்க சார்.

டைரக்டர்: யோவ் அவரு அப்புறம் யோசிப்பார்.you proceed.

க.கபிலன்: அப்ப குருவி பறந்து வந்து துப்பாக்கிய தட்டி விடுது. தவளை தாவி போய் சங்கிலிய அவுத்து விட்டு ஹீரோவ விடுவிக்கிது. அப்போ மந்திரி ஒரு திடுக்கிடும் தகவல சொல்றாரு.ஹீரோவோட அம்மா அவர் அக்கா என்றும், சொத்துக்காகதான் இப்படி செஞ்ஜேன்னு சொல்லறார். அதுனால ஹீரோவும் ஹீரோயினும் மாமா பொண்ணு அத்தை பையன் ஆயிடறாங்க. ஹீரோ எல்லாரையும் அரஸ்ட் பண்ணறார்.

தயாரிப்பாளர்: என்னாய்யா இது, அவர் எப்புடியா அரெஸ்ட் பண்ணுவார்?

க.கபிலன்: அங்க ஒரு twist.அப்பத்தான் அவர் சொல்லறார். நா I.A.S மாதிரி நடிச்சேன். உன்மையிலேயே நா I.P.S.

தயாரிப்பாளர்: சரி ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் இன்னும் கிடையாதா??

க.கபிலன்: அது இல்லாம எப்பிடி சார் தமிழ் படம். " நா பொருக்கறது பேப்பர், ஆனா என் வாழ்க்கை என்றும் சூப்பர்".

டைரக்டர்: சரிய்யா, கதையெல்லாம் சொன்ன, டைடிலயும் நீயே சொல்லு

க.கபிலன்: 3 டைட்டில் வெச்சுருக்கேன் சார். ஒரு பேப்பர் நோட்டாகிறது, காகித மேகம், எவன்டா மந்திரி?

தயாரிப்பாளரும் டைரக்டரும்: அப்பா கதையரசர் கபிலா, இப்பவே கண்ண கட்டுது நீ அடுத்தவாரம் வந்து பாரு.

க.கபிலன்: சார் அடுத்தவாரம் இன்னும் ரெண்டு கதையோட வரேன் சார், வர்ட்டா!!!!!!!!!

Labels: , , ,

1 Comments:

  • At 10:15 PM, Blogger Geetha Sambasivam said…

    இதுக்குப் போட்ட பின்னூட்டம் வரலையா? :((((((

     

Post a Comment

<< Home