market passion

Saturday, April 12, 2008

கவிதைகள்

முதல் முதலாய் உன்னைப் பார்க்கும் போது
உன் மௌனத்தை பார்த்து நான் நினைத்தேன்
நீ அதிகம் பேச மாட்டாய் என்று!

பின்புதான் புரிந்தது அதன் ரகசியம்
உன் இதழ்கள் ஒன்றையொன்று
முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்று!




என்னை மயக்கியதோடல்லாமல்
என் தோட்டத்து மலர்களையும் அல்லவா
மயக்கினாய் நீ!

அவற்றை நான் கடக்கும் போதெல்லாம்
என்னைப் பார்த்து ஏக்கமாய்
கேட்கின்றன

எப்போது எங்களைப் பறித்து
உன் காதலியின் கூந்தலில்
சூடப் போகின்றாய் என்று


காதலியின் புகைப்படம்

உன் நிழலுடன் இருந்தாலே
இத்தனை சுகமென்றால்
உன்னுடன்( நிஜத்துடன்)இருந்தால்
சொல்லவும் வேண்டுமோ?


ஊடல்

அன்பே,உன் மௌனத்தால்
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்
இன்று உன் மௌனத்தைக் கொன்று விடு
என்னுடன் பேசிவிடு


முரண்பாடு

ஏன் என் மனதில் இந்த முரண்பாடு
உன் முகத்தை பார்க்கப் பார்க்க
இன்னும் வாழ ஆசை
இதைவிட சிறப்பாக இவ்வுலகில்
ஏதும் இல்லை என்பதால்
இப்பொழுதே சாகவும் ஆசை!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home