market passion

Saturday, April 12, 2008

கவிதைகள்

அஹிம்சைக் கொலை


நீதான் உண்மையான காந்தியவாதி!
கத்தியின்றி ரத்தமின்றி
என் தினம் கொல்லும்
அஹிம்சாவாதி!
தினம் தினம் உன் கொலைகளை சந்திக்க
கோடி முறை நான் உயிர்த்தெழுவேன்!



உன் புருவம் என்ன கருப்பு வானவில்லா?
அதைக் கண்டதும் என் மனதில் மழை பெய்கிறதே!




தமிழைக் காதலிக்கும் தமிழச்சியே
இந்த தமிழனையும் காதலி!



நான் வாழும்போது உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைப்பதாலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home