market passion

Saturday, April 12, 2008

கவிதைகள்

பெற்ற கடன்

எந்த கடனையும் திருப்பிக் கொடுக்கலாம்
ஆனால் இந்த கடனை திருப்ப முடியாதென்று
நண்பன் ஒருவன் பந்தயம் வைத்தான்

முன்னர் நான் நினைத்திருந்தேன்
இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால்
மீண்டும் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று

ஆனால் இப்பொழுது எண்ணுகிறேன்
நான் பட்ட கடனை அடைக்க வேண்டும்

ஆதலால்
அடுத்த பிறவியில்
நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home