market passion

Wednesday, June 20, 2007

நானும் நாலும்

கீதா மேடம் 300வது பதிவு போடறத்துக்குள்ள நான் என்னோட 25வது பதிவ போட்டுடு ஊருக்கு கிளம்பலாம்னு தோணிச்சு.அதான் ஒரு சின்ன மொக்கை. எனக்கும் நம்பர் 4க்கும் உள்ள தொடர்பை சொல்லலாமேன்னு தோணிச்சு.

பிறந்த தேதி 22 -ஜூன் - 1958 (2+2=4)

கூட பிறந்தவர்கள் - 4பேர்(2 அண்ணா 1 அக்கா 1 தம்பி)

ஆதலால் 5 குழந்தைகளில் நான் 4வது

என் மனைவியும் அவள் பெற்றோர்களுக்கு 4 வது கோந்தே!

2 அண்ணன்கள் 1 அக்காவுடன் அவர்கள் வீட்டிலும் 4 பேர்

காலேஜ் 4 வருஷம் - P.U.C - 1 வருஷம்( ஆமாங்க நாங்கயெல்லாம் கற்காலம் - கல்வியை ஒழுங்காக கற்று கொண்ட காலம் - தான்) B.COM -3 வருஷம்

4 எழுத்து படிச்சவன் - B.COM , C.A

CA படிச்சது மொத்தம் 4 வருஷம்

Exams 4 தடவை எழுதினேன் - Inter 2 தடவை , Final 2 தடவை

4லும் தெரிஞ்ஜவன்னு 4 பேரு சொல்லனும்ம்னு ஆசை

என் மனைவிதான் நான் பார்த்த 4வது பெண் - அவளுக்கும் இது தெரியுங்கோ அதுனால எந்த பரட்டையும் பத்த வைக்க முடியாதுங்கோ?????????

4 வது படிக்கும் போது 100% attendence வாங்கி பள்ளிக்கு தவறாமல் வந்தவர்னு ஒரு புத்தகம் பரிசு வாங்கினேன்

அதே 4 வது படிக்கும்போது வகுப்பு தலைவன் என்ற பொறுப்புல(ஆணவத்துல) லேட்ட வந்த 1 பைய்யன வகுப்பு ஆசிரியர்ட்ட போட்டு குடுத்து அதுக்காக அவன் என் முதுகுல ஏதோ ஒரு செடியோட இலையை தடவ 4 நாள் நார்மலா படுக்க முடியல்லீங்க

சொந்தமா ஆபீஸ் நடத்தின(லக்ஷணம்)து போதும்னு நினைச்சு வேலைக்கு போக ஆரமிச்சு இது 4ஆவது வருஷம்

சௌதி அரேபியா வந்து ஆபீஸ்ல சேர்ந்தப்பறம்தான் பாக்கறேன் ஆபீஸும் வீடும் இருக்கற தெரு 4th street.

சௌதில பொழுது போகாம சொந்த ஊரான சிதம்பரத்த பத்தி ஏதோ நெட்டுல தேட போக அப்ப கீதா மேடம் வலைல சிதம்பர ரகசியம் மற்றும் கோயில் பத்தி படிக்க போயி இப்ப activeஆ இருக்கற BLOG - 4 எழுத்துதான்


சரி சரி மொக்கை போட்டது போதும்னு நீங்க நினைக்கறத்துக்குள்ள நா எஸ்கேப் - அட ஊருக்கு போய் இறங்கற அன்னிக்கும் தேதி 22ங்க(2+2 =4) அதாங்க பிறந்த நாள் அன்னிக்கி - அதுவும் 49வது பிறந்த நாள் - ஓஓஓஓஓஓஓ - 4+9 = 13 =4 உடம்பெல்லாம் புல்லரிக்குதுடா சாமி!!!!!!!!!!!!!!!!


டாட்டா,பைபை

Labels:

11 Comments:

  • At 12:17 PM, Blogger Geetha Sambasivam said…

    ஹிஹி, மணிப்பயல், நீங்க ப்ளாக் எழுத, (ரகசியமாத் தலைலே அடிச்சுக்கிறாங்க, நம்பாதே, நம்பாதே!) நான் ஒரு காரணமாய் அமைந்தது பத்தி ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஹிஹிஹி, அடைப்புக் குறிக்குள்ளே இருக்கிறது என்னோட மனசாட்சி பேசினது. அப்போ அப்போ வந்து கொஞ்சம் சத்தம் போடும். தலையிலே தட்டி வைப்பேன். அது சரி, அது என்ன புலி உங்க ப்ளாகுக்குத் தவறாமல் வருது! உர்ர்ர்ர்ர்ர்ர்ர், சொல்லி வைங்க அதுகிட்டே இது கொஞ்சம் கூட நல்லா இல்லைனு! நறநறநற, இது புலிக்கு!

     
  • At 12:19 PM, Blogger Geetha Sambasivam said…

    நல்லவேளையா 4 முறை கல்யாணம் செய்துட்டதாய்ச் சொல்லலை, ஹிஹி, சொல்ல வேணாம்னுதான் இருந்தேன், எல்லாம் இந்த மனசாட்சி இப்போ உள்ளேயே வந்துடுச்சு, சொல்லு, சொல்லுனு ஒரே பிடுங்கல் தாங்கலை! சொல்லிட்டேன். அப்பாடா, நிம்மதி! உங்க தங்கமணிக்கு ஒரு மெயிலும் அனுப்பிடறேன். :P

     
  • At 10:48 PM, Blogger manipayal said…

    புலிய நா அதோட குகைகுள்ளயே சந்திச்சுட்டேன்.போன்ல பேசினேன்.தனி இமெயில் பரிமாற்றம் இப்படி எங்க நட்பு பாக்காமலேயே விஜயகுமார் - சரத்குமார் ரேஞ்ஜுக்கு போயிகிட்டுருக்கு. சௌதியில் இருந்து சிவப்பு நதி, அதாங்க RED SEA
    தாண்டினால் சூடான் தானே!!!!!!!!!!!!! அதான் அவ்வளவு நெருக்கம்

     
  • At 11:01 PM, Blogger manipayal said…

    இந்த மணிபயலுக்கு கிடைத்த தங்கமணி நெஜமாவே தங்கம்தாங்க.பெயர் பத்மினி இ மெயில் miniprinci1@yahoo.co.in ஒரு மெயில் தட்டி விடுங்க.
    தப்பே இல்லை
    அதுவும் 27 ஜுன் எங்கள் திருமண நாள் அன்னிக்கி

     
  • At 12:46 PM, Blogger Geetha Sambasivam said…

    எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :)))))))))

     
  • At 1:38 PM, Blogger ALIF AHAMED said…

    என்னக்கு நீதான்ய்யா வேணும்.... :)

    மொக்க போட

     
  • At 4:45 PM, Blogger Geetha Sambasivam said…

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள், மணிப்பயல், நீங்க பார்க்கிறீங்களோ இல்லையோ தெரியாது, என்னாலே காலையிலேயே வந்து சொல்ல முடியலை. வாழ்த்துக்கள்.

     
  • At 3:16 AM, Blogger ambi said…

    @mani, நாலா சாரி, நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர். :)

    //நான் ஒரு காரணமாய் அமைந்தது பத்தி ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஹிஹிஹி, //

    @geetha paati, எதுக்கு இந்த விளம்பரம்..? :p

     
  • At 6:10 PM, Blogger Geetha Sambasivam said…

    ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசி போல் வருவேன்
    நாளைக்கு நீ வந்து "எட்டு" பதிவு போடும்வரை விட மாட்டேன்." :)))))))
    எம்.எஸ்.வி. குரலிலே பாடிக்கிட்டே எல்லாரும் எட்டு போடுங்க!

     
  • At 6:34 AM, Blogger நாகை சிவா said…

    //புலிய நா அதோட குகைகுள்ளயே சந்திச்சுட்டேன்.போன்ல பேசினேன்.தனி இமெயில் பரிமாற்றம் இப்படி எங்க நட்பு பாக்காமலேயே விஜயகுமார் - சரத்குமார் ரேஞ்ஜுக்கு போயிகிட்டுருக்கு. சௌதியில் இருந்து சிவப்பு நதி, அதாங்க RED SEA
    தாண்டினால் சூடான் தானே!!!!!!!!!!!!! அதான் அவ்வளவு நெருக்கம் //

    அப்படி சொல்லுங்க.....

    //அது என்ன புலி உங்க ப்ளாகுக்குத் தவறாமல் வருது!//

    பொறுக்காதே....

    என்ன சொன்னார்னு கேட்டீங்கள......

    நம்ம பவர் அப்படி.... புரியுதா?

     
  • At 10:59 AM, Blogger நானானி said…

    மணிப்பயல்! ரொம்பவே நல்லாருக்கு.
    மொத்தத்தில் நாலு பேரு நல்லாருக்குன்னு சொல்றமாதிரி.
    அந்த நாலு பேரில் நானும் ஒருத்தி.
    அடிக்கடி வாங்க.
    கீதாம்மாக்கு நறநறநற ரொம்பப்பிடிக்கும்போல.

     

Post a Comment

<< Home