market passion

Tuesday, June 12, 2007

வணக்கம் SPB சார்,
61வது பிறந்த நாளை அமர்க்களமா கொண்டாடும் உங்களால எனக்கு ஏற்படும் தினசரி பிரச்சனைகளை நீங்களே கேளுங்கள்

1. M.S amma இல் ஆரம்பித்து கானா உலகனாதன் வரை எவ்வளவோ பேர் பாடல்களை கேட்டாலும் உங்கள் குரல் மட்டும் என்னை பைத்தியம் பிடிக்க வைத்தது ஏன்?

2. காலேஜ் கடைசி நாளில் "கம்பன் ஏமாந்தன்" பாடலை நான் என்னால் முடிந்த வரை நன்றாக பாட எற்கனவே அந்த பாடல் வரிகளினால் கோபம் அடைந்த சக மாணவி பவானி பெரிய SPB ன்னு நினைப்பு என்று திட்டிய அளவுக்கு நீங்கள் ஏன் அழகாக பாடினீர்கள்?

3. திரைப்பட பிண்ணனி இசையை பற்றி ஓரளவு தெரிந்த வேளையில் தாங்கள்தான் ரஜினி மாதிரியும் கமல் மாதிரியும் பாடுகிறீர்கள் என்று நான்
சொல்ல, இல்லை என்று Bet வைத்து அதில் தோற்றுப்போன ஒரு நண்பன் எதிரி ஆனது உங்களால்தானே?

4. காதல் பாடல்களில் எல்லா விதமான உணர்ச்சிகளையும் காட்டி இளம் பெண்களின் மனதில் இடம் பிடித்து என் போன்ற இளைஙர்களுக்கு காதலிகள் கிடைக்காமல் செய்தீரே, இது நியாயமா?

5. சரி காதலிதான் கிடைக்கவில்லை மனைவியை காதலிக்கலாம் என்று முடிவு செய்து "நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்" என்று வாழ்கைல செட்டில் ஆரத்துக்குள்ள "சம்சாரம் அது மின்சாரம்" என்ற உண்மையை என் அப்பாவி மனைவிக்கு தெரிய வைச்சு என் வாழ்கையில் ஷாக் அடிக்க வச்சது ஏன்?

இப்படி பல்வேறு கட்டங்களில் என் வாழ்வில் புகுந்து விளையாடிய/விளையாடிக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு என் மனதில் ஆயுள் தன்டணை விதித்து தீர்ப்பளிக்கின்றேன்

Recording க்கு மட்டும் அவ்வபொழுது Parole லில் சென்று வரலாம்

Labels:

2 Comments:

  • At 9:18 AM, Blogger Porkodi (பொற்கொடி) said…

    periya spb rasigar thaan! :-) enakku spbyoda kuralai vida avar kuzhandhaithanamana pechu than romba pidikkum!

     
  • At 9:44 AM, Blogger manipayal said…

    வாம்மா பொர்கொடி, உன் Bloga படிச்சுட்டுதான் நான் தமிழ்ல எழுத ஆரமிச்சேன் நீ இங்லீஷ்ல கமெண்ட்
    அனுப்பறயே இதெல்லாம் நல்லாவா இருக்கு.
    thanks for visit

     

Post a Comment

<< Home