market passion

Tuesday, January 29, 2008

ஸ்டோரி டிஸ்கஷன் - part 2

உடனே ஹீரோயின் நீங்கள் பொருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி, நானும் உங்களுடன் வருகிறேன் அன்று கிளம்புகிறாள். அவர்களுக்கு ஒரு குருவியும் பல்லியும் உதவி செய்கின்றன.

தயாரிப்பாளர்: என்னது குருவியும் பல்லியுமா??

க.கபிலன்: பின்ன என்ன சார்! எவ்வளவு நாள்தான் நாய்,ஆடு,பாம்பு,யானை இவைகளையே வச்சு எடுக்கறது.

டைரக்டர்: சரி அதுவும் கொஞ்ஜம் வித்தியாசமாதான் இருக்கு, மேலே போங்க.

க.கபிலன்:ஒரு நாள் மந்திரிய தொடர்ந்து போய், ஹீரோ அவங்க கோட்வுன்ல மாட்டிகிறார். அவர சங்கிலில கட்டி போட்டு, " நீ உங்க அம்மா மகன் தானே, சொல்லுன்னு மிரட்டறாங்க. ஆனா ஹீரோவோ " நீங்க எவ்வளவு அடிச்சாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" ங்கறான். ஏன்னு கேட்டா "எனக்கு கேள்வியே புரியல்லயே" ங்கறான்.சரி இவன் உண்மைய ஒத்துக்கமாட்டான்னு சொல்லி மந்திரி அவனை சுட தயாராகறார்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, சஸ்பென்ஸ் தாங்கல்லையா, சீக்கிரம் சொல்லு,

க.கபிலன்: சார் கதை கேக்குற உங்களுக்கே இப்பிடி இருந்தா, மியூசிக்கோட இந்த ஸீன் படத்துல எப்படி இருக்கும் கொஞ்ஜம் யோஜிச்சு பாருங்க சார்.

டைரக்டர்: யோவ் அவரு அப்புறம் யோசிப்பார்.you proceed.

க.கபிலன்: அப்ப குருவி பறந்து வந்து துப்பாக்கிய தட்டி விடுது. தவளை தாவி போய் சங்கிலிய அவுத்து விட்டு ஹீரோவ விடுவிக்கிது. அப்போ மந்திரி ஒரு திடுக்கிடும் தகவல சொல்றாரு.ஹீரோவோட அம்மா அவர் அக்கா என்றும், சொத்துக்காகதான் இப்படி செஞ்ஜேன்னு சொல்லறார். அதுனால ஹீரோவும் ஹீரோயினும் மாமா பொண்ணு அத்தை பையன் ஆயிடறாங்க. ஹீரோ எல்லாரையும் அரஸ்ட் பண்ணறார்.

தயாரிப்பாளர்: என்னாய்யா இது, அவர் எப்புடியா அரெஸ்ட் பண்ணுவார்?

க.கபிலன்: அங்க ஒரு twist.அப்பத்தான் அவர் சொல்லறார். நா I.A.S மாதிரி நடிச்சேன். உன்மையிலேயே நா I.P.S.

தயாரிப்பாளர்: சரி ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் இன்னும் கிடையாதா??

க.கபிலன்: அது இல்லாம எப்பிடி சார் தமிழ் படம். " நா பொருக்கறது பேப்பர், ஆனா என் வாழ்க்கை என்றும் சூப்பர்".

டைரக்டர்: சரிய்யா, கதையெல்லாம் சொன்ன, டைடிலயும் நீயே சொல்லு

க.கபிலன்: 3 டைட்டில் வெச்சுருக்கேன் சார். ஒரு பேப்பர் நோட்டாகிறது, காகித மேகம், எவன்டா மந்திரி?

தயாரிப்பாளரும் டைரக்டரும்: அப்பா கதையரசர் கபிலா, இப்பவே கண்ண கட்டுது நீ அடுத்தவாரம் வந்து பாரு.

க.கபிலன்: சார் அடுத்தவாரம் இன்னும் ரெண்டு கதையோட வரேன் சார், வர்ட்டா!!!!!!!!!

Labels: , , ,

Monday, January 28, 2008

ஸ்டோரி டிஸ்கஷன்

தயாரிப்பாளர் துரைசிங்கம் தன் திரைப்பட நண்பர்களுடன் சோகமாக பேசிகொண்டிருந்தார்.

" என்னாய்யா இது, நம்ம நெலம இப்புடி ஆயிடுச்சு!!! வன்முறையும் ஆபாசமும் சினிமாவில் இருக்கக்கூடாதுன்னு இப்புடி போராட்டம் நடத்தறாங்க.மொத்தம் 15 ரீலிலே இது ரெண்டையும் எடுத்துட்டா 14 ரீல் போயிடுமே.பாக்கி ஒரு ரீல வச்சு பயாஸ்கோப்புதான் ஓட்டணும்"

அந்த சமயத்தில் ஒருவர் உள்ளே வருகிறார். " சார், என் பெயர் கதையரசர் கபிலன்.
எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா, வெள்ளி விழா கொண்டாடற மாதிரி ஒரு கதை பண்ணி தரேன் சார்"

டைரக்டர்: அதென்ன கதையரசர் கபிலன். உங்க அம்மா அப்பா வச்ச பேரா?

க.கபிலன்: இல்ல சார். கபிலன் அவங்க வச்ச பேர். பட்டம் நானா சேத்துகிட்டேன்.
சார் கதை சொல்லட்டுங்களா?

தயாரிப்பாளர்: கதை யாருக்குயா வேணும்? இவ்வளவு நாளா கதையை வச்சா படம் எடுத்தோம்.

க.கபிலன்: சார் கதைன்ன நிஜமா கதை கிடையாது, கதை மாதிரி.

டைரக்டர்(தயாரிப்பளரிடம்) சார், நம்பளுக்கோ இப்ப வேலை எதுவும் இல்லை. சும்மா கேட்டுதான் பாப்போமே.

தயாரிப்பாளர்: சரி சொல்லுய்யா, என்ன கிராமத்து கதையா?

க.கபிலன்: இல்ல சார், கிராமத்து கதைன்னா அதுல கெட்ட வார்த்தையெல்லாம் வரும் அப்புறம் சென்சார் பிராப்ளம். நம்ப கதை நகரத்துல நடக்கறா மாதிரி வச்சுப்போம்

டைரக்டர்: சரிய்யா அப்படியே வச்சுக்க, கதைய சொல்லு.

க.கபிலன்: நம்ம ஹீரோ படிக்காதவன். ஏழை. தெருத்தெருவா பேப்பர் பொருக்கறதுதான் அவன் வேலை.

டைரக்டர்: ஆஹா இந்த மாதிரி காரக்டர் இது வரைக்கும் எந்த படத்திலும் வந்ததில்லை, புதுமையா இருக்கு மேலே சொல்லு.

க.கபிலன்: ஹீரோயின் ஒரு கலெக்டர். ஒரு நாள் அவங்க ஆபீஸ் வாசல்ல ஹீரோ பேப்பர் பொருக்கிகிட்டிருக்கும் போது, கலெக்டர் கிட்ட ஒரு மந்திரி ஒரு பைல்ல கையெழுத்து போட சொல்லி மிரட்டறார். இருவருக்கும் தகராறு வர அந்த சத்தத்தை கேட்டு ஹீரோ அந்த ஆபீஸ் இருக்கும் நாலாவது மாடிக்கு ஜம்ப் பண்ணறான். இதுதான் ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் முதல் காட்சி. அந்த இடத்துல நம்ம அவர்களுடைய கண், காது, மூக்கு, கால் நகம் இவற்றை மாத்தி மாத்தி காட்டறோம். அப்ப ஹீரோ பொருக்கின குப்பையும், கலெக்டர் ஆபீஸ் குப்பையும் ஒண்ணா கலக்குது.

டைரக்டர்: இங்க ஒரு பாட்டு வச்சுக்கலாம். backgroundல கலர் கலரா பேப்பர் பறக்க விடலாம்.

தயாரிப்பாளர்: ஆனா குப்பை பொருக்கறவனும் கலெக்டரும் எப்பிடியா சேருவாங்க? லாஜிக்கா இல்லையே?

க.கபிலன்:அதுக்கு ஒரு ஐடியா வச்சுருக்கேன். நம்ம ஹீரோ சொல்றான்"ஊர்ல ஒரு குப்பை இருக்க கூடாது, அதுதான் என் லட்சியம், அப்பறம்தான் நம்ம கல்யாணம்னு". அதுக்கு ஹீரோயினும் "இந்த மந்திரி தொல்லை தாங்கல்லை, அதுனால நானும் வேலைய ராஜினாமா பண்ணிட்டு உங்க லட்சியத்தை நிறைவேத்துவேன்னு சபதம் போடறா.இந்த இடத்துல அவங்க ஆபீஸ்ல கடிகாரம் மணி அடிக்குது, சாமி படத்துலேந்து ஒரு பூ விழுது. ஒரு பொம்மை தலை ஆட்டுது.ஒரு காலண்டர் காத்துல திரும்பிக்குது.

டைரக்டர்:ஆஹா சூப்பர், அப்புறம்!

க.கபிலன்: ஹீரோயின் ஹீரோவுக்கு அவன் பொருக்கும் பேப்பரில் இருந்தே உலக அறிவும்,படிப்பறிவும் சொல்லி தராங்க.இப்பிடியே படிச்சு ஒரு வருஷத்துல ஹீரோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ணிடறார்.

தயாரிப்பாளர்: யோவ், இது உனக்கே கொஞ்ஜம் ஓவரா தெரியல்லை, சரி மேலே சொல்லு.

க.கபிலன்: ஒரு நாள் ஹீரோ ஹீரோயின் வீட்டுக்கு போறார். அங்கே ஹீரோயின் ஒரு பாட்டை கேட்க அவருக்கு அதிர்ச்சி.அந்த பாட்ட எங்கயோ கேட்ட ஞாபகம்.அப்பறம்தான் அவருக்கு ஞாபகம் வருது அது அவர் தாயின் கருவில் உருவானபோது, அவர் அம்மா பாடிய பாட்டு.அதனால் தன் தாயின் மரணத்திற்கும் ஹீரோயின் அப்பாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்படுகிறான். இந்த உண்மை தெரிந்த பிறகே நம் திருமணம் என கூறி வெளியேருகிறான்.

தயாரிப்பாளர்: ஆஹா அம்மா சென்டிமெண்ட் அருமைய்யா, பின்னிட்ட போ!

க.கபிலன்: இங்கே இடைவேளை வச்சுக்கலாம் சார்.

தயாரிப்பாளர்: சரிய்யா, இன்னிக்கு இது போதும், மீதிய நாளைக்கு வந்து சொல்லு.

Labels: , , ,

Friday, January 18, 2008

The insanity gets a break

For the first time since the U.S Fed started cutting interest rates in September2007,
the Indian stock market stopped its manic and insane bull run for this week after galloping from 15500 to 21200. It simply disregarded the global events like the write down of billions of dollars and all the big banks of the world's largest economy running for cover to shore up capital and their balance sheets. And adding to the mania was the theory of Growing indian economy, pouring money into Indian markets and new found theory of demerging several divisions of a company to take advantage of the insanity.

Just look at the following absurds.

1.Reliance Energy seperates Reliance Power and while Anil ambani acquires shares in Reliance power at Rs.17/- per share, issues it to the public at 450 and that in turn expects to get listed at 800-900. And the project will take 6 years to equal the capacities of NTPC or Tata Power which are trading at significant discounts. It is not anything but insanity?

2. The High court of a state government just recommends a lower price to be paid by the sugar companies for the procurement of sugar cane and immediately all the sugar shares(even the ones which are not in that state) jump 10-15-20% as if all is rosy from then on. The forgotten facts are that they are all already bleeding with losses last 2 quarters, the crushing for the current season got delayed by 30-35 days and the sugar prices in the international market is still near its 1 year low.

3. The so called oil marketing Navrathnas loose crs of money everyday and the annual loss is estimated to be around Rs.70,000/- crs due to under recovery and subsidies but the government does not allow them to raise prices even though it has OFFICIALLY
dismantled the APM - Administered Price Mechanism way back in 2002.

4. The U.S dollor continues to plunge across all major currencies and most of the I.T majors accepting that further strengthening of rupee will surely affect the margins. Thats is why when the sensex is just 10% off its all time highs as of yesterday(18th Jan 2008) most of the I.T heavyweights like Infosys,NIIT Tech,Patni Computers,Satyam and Tech Mahindra hit their 52 week lows.

5. Now if the real estate boom was predominently aiming at these IT bigboys for commercial purposes and their young,aspiring and well paid engineers for residential purposes, how will that sustain when the industry is reeling under margin pressure and slowdown.

The negatives goes on and on but the stock market is disregarding all these and on the contrary went from strength to strength(or shall we say speculation to over speculation)only to create a bubble that finally went bust this week.

While many may think that this sharp fall is an opportunity to buy, I see a further fall of atleast 1000 points in sensex to 18000 levels and in case of worsening situations in U.S like bankruptcy, a possibility of 16500-17000. So get back your sanity and invest for long term.

Labels:

Friday, January 11, 2008

PROUD INDIAN

I am proud to be an Indian for so many things in the past. Today I have that feeling again for one more reason thanks to our own RATAN TATA. The world watched INDIA and HIM today IN AWE as he drove and got out of his dream car, the People's car of India - THE TATA NANO costing just 2500$ or 1 lakh rupees. Remember the project was enviseiged 4 years back and the price of 1 lakh was fixed then.Inspite of so much of increase in costs of various components, he kept & met his promise at least at the Calcutta Showroom level.After transportation and taxes it may cost 1.30lakhs and a a.c version may cost 1.40-1.50lakhs. Still it a lakh cheaper than a Maruti 800 and nearly half of the cheapest car in the world coming from China.It is a 625CC engine and was unveiled in the Delhi Auto Show yesterday the 10th January 2008. The car will start plying in the Indian roads later in the year and will surely be a big hit with the growing aspirations of Indian Middle Class.In the ensuing ceremony Ratan Tata said he used to leave his factory somedays at 2am and again return at 7am next day morning.Such was the committment and determination and no wonder he is were he is today.KUDOS TO RATAN TATA AND TATA MOTORS AND BE PART OF THIS GREAT MOMENT TO BE A PROUD INDIAN











Labels: , ,

Thursday, January 10, 2008

இதுதாண்டா மொக்கை

என்னடா இது, இந்த கீதா மேடம் இப்படி சொல்லிட்டாங்க, சில பேர் எழுதறதெல்லாம் மொக்கைகறாங்க ஆனா எனக்கு மொக்கயே போட தெரியாதுங்கறாங்க. அப்ப நம்ப எழுதறதெல்லாம் உருப்படியானதா??? இல்ல அவங்க எதுவுமே படிக்கல்லையா??? ஒண்ணுமே புரியல்லடா சாமி.

சரி விஷயத்துக்கு வருவோம். எத பத்தி மொக்கை போடலாம். ஸ்டாக் பத்தியும் எழுதகூடாதுங்கறாங்க. ஓ கே. மொக்கை என்பது "கை" என்று முடிவதால் டி.ராஜேந்தர் ஸ்டைலில் எழுதலாம் என்று முடிவு செய்ததால் வந்த வினை இது.


வாழ்க்கைக்கு வேண்டியது நம்பிக்கை
ஆனால் நம் கையில்தான் உள்ளது நம் வாழ்க்கை

நெல்லு குத்த வேண்டும் உலக்கை
முழம் போட வேண்டும் வெரும்கை

எல்லா அரசியல்வாதியின் ஆசை முதலமைச்சர் இருக்கை
ஆனால் அது முள் மேல் நடக்கும் ஒரு வாழ்க்கை

முடியெல்லாம் கொட்டிபோனால் அது வழுக்கை
பல்லெல்லாம் கொட்டிபோனால் அது பொக்கை

காங்கிரஸின் சின்னம் ஒரு கை
ஏர் டெக்கானின் சின்னம் இரு கை

சாத்தமுது எனக்கு பிடித்த தளிகை
அதை சாப்பிட தினம் வரும் காக்கை

திரையில் நடிக்க வேண்டும் என்பது என் தணியாத வேட்கை
ஆனல் என் வீட்டிலேயே அதற்கு வந்தது தணிக்கை

யானைக்கு இருப்பது தும்பிக்கை
பிள்ளையாருக்கு இருப்பது துதிக்கை!!!!!!!!!!!!!

இந்த போஸ்ட் என் 80ஆவது எண்ணிக்கை
ஆனால் இதுவே என் முதல் மொக்கை


இப்ப சொல்லுங்க, இனி மொக்கை போட சொல்லி என்ன யாராச்சும் கேப்பீங்களா?????

Labels: ,

Sunday, January 06, 2008

happy birthday - a.r.rahman

இன்று திரு ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள். நம்ப முடியவில்லை அவருக்கு 42 வயது என்று. 1966 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த அவர் ரோஜா படத்தின் மூலம் நமக்கு கிடைத்தார். அந்த முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல் மேலும் மூன்று முறை(மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்) சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார். தமிழ் மற்றும் இந்திய இசையை உலகளவில் பெயர் பெறச்செய்தார். வந்தே மாதரம் பாடலின் மூலம் மீண்டும் தேசபற்றை இந்தியார்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் உயிர்ப்பித்தார்.



அவருடைய சிறந்த பாடல்களை பட்டியல் போட்டால் இந்த வருடம் முழுவதும் நான் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். இங்கே ஒரே ஒரு பாடல். இந்திரா படத்தில் வரும் "நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லயே" என்ற இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.இதமான "கமாஸ்" ராகத்தில் அமைந்த இந்த பாடலை மொட்டை மாடியில் நிலாவை பார்த்தபடி கேட்டு பாருங்கள்.அந்த சுகமே தனி. இன்னுமொரு விஷயதிற்காகவும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும். இந்தபாடலில் ஆடும் ஆறு குழந்தைகளில் ஒருத்தி என் அண்ணன் மகள் நித்யா( நீல பட்டு பாவாடையும் சிகப்பு சட்டையும் அணிந்தவள் - திரு.தனஞ்செயன் அவர்களிடம் நாட்டியம் பயின்றவள்)

இதோ உங்களுக்காக - நிலா காய்கிறது

Labels: , ,

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

வணக்கம் நண்பர்களே,

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 17 நாள் லீவில் சென்னை போய் 4ஆம் தேதி மீண்டும் சௌதி வந்தாச்சு. கிளம்பும்போது கூட என்னை அனுப்ப மனசில்லாம ஊரே அழுதது.கார்த்தால இருந்து ஒரே மழை. வேற வழி இல்லாம கிளம்பி வந்தேன். சென்னையில் புலியை( நாகை சிவா) சந்தித்து பின்பு அ(தை)வரையும் அழைத்துகொண்டு அண்ணா நகர் தாண்டின உடனே இருக்கும் அம்பத்தூரில்(ஏன் நிறைய பேர் இதை ரொம்ப தூரம்கராங்க. ஒரு வேள நடந்தே போயிருப்பாங்களோ!!!!!!!!!!!) உள்ள கீதா மேடம் வீட்டிற்கு போனேன். வெங்காய பஜ்ஜி, பால்கோவா மற்றும் அருமையான காப்பி கொடுத்தார்கள். நமது வலை நண்பர் வேதாவும் அங்கே வந்திருந்தார்கள். திரு.சாம்பசிவம் அவர்களுடன் சொந்த ஊரான சிதம்பரம் பற்றி பழங்கதைகள் பேசினேன். T R C சாரிடம் இரண்டு முறை பேசினேன் ஆனால் நேரில் சந்திக்க முடியவில்லை. கிளம்பும் அன்று அவரே வருவதாக சொன்னார் ஆனால் மழை வில்லானாக வந்து எங்கள் சந்திப்பை தடுத்தது.

இரண்டு கர்னாடக இசை கச்சேரிகள்(ஓ.எஸ்.அருண், சஞ்ஜய் சுப்பிரமணியன்), ஒரு நாள் திருவண்ணாமலை ஸ்வாமி தரிசனம் மற்றும் கிரிவலம், இரண்டு நாள் நண்பர்களுடன் கும்மாளம் என லீவு ஜாலியாக போனது. இப்பொழுது மீண்டும் ஆபீஸ். மீண்டும் பிளாக். என் சிந்தனை ஒட்டகத்தை(பின்ன சௌதில இருந்துகிட்டு குதிரைன்னா சொல்ல முடியும்)தட்டி விடறேன். படிக்கறதும் படிக்காததும், கமெண்ட்டறதும் கமெண்ட்டாததும் உங்க இஷ்டம்

Labels: ,