market passion

Saturday, August 11, 2007

நினைவில் நின்றவை

சமீபத்தில் ஊருக்கு சென்ற பொழுது சௌதி எடுத்து வருவதற்காக பழய ஆடியோ காஸெட்டுகளை தேடினேன். அப்போது சில எஸ்.வீ.சேகர் நாடக காஸெட்டுகள் கிடைத்தன. ஏற்கெனவே பார்த்த/கேட்டவைகளாக இருந்தாலும் என் நினைவில் பதிந்த சிலவற்றை பதிவு செய்கிறேன்.

ஜோக் 1:

கதா நாயகன் நாயகியிடம் ; என் பேரு சிதம்பரம், உங்க பேரு
கதா நாயகி : என்னை விமலா, விமலான்னு கூப்புடுவாங்க
கதா நாயகன்: ஏன் 2 தடவை கூப்பிட்டாத்தான் வருவீங்களா

ஜோக் 2

வேலைக்கு சேர்த்து முதல் மாத முடிவில்,
முதலாளி; சபாஷ் சிதம்பரம், இந்த ஒரு மாதத்திலேயே வேலை நுணுக்கங்களை எல்லாம் நல்ல கத்துக்கிட்டயே. உனக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்.
சிதம்பரம் : சார் ஒரே ஒரு சந்தேகம் சார்
முதலாளி ; என்னப்பா
சிதம்பரம்: இந்த மாசம் சம்பளம் எப்ப சார் குடுப்பீங்க
முதலாளி: அது எங்கப்பா போக போகுது, என்கிட்டேதானே பத்திரமா இருக்கு
சிதம்பரம்: அத என்கிட்ட குடுத்தீங்கன்னா நா செலவழிக்க வசதியா இருக்கும்

ஜோக் 3

ஆஞ்சனேயரை பழித்ததனால் தனக்கு வால் முளைத்ததாக கனவு காணுகிறான் நமது கதானாயகன் அப்பொழுது அவன் ஒரு இன்டர்வ்யு போகிறான். அங்கே சில கேள்விகள்

பிடித்த ஊர் - வால்பாறை
பிடித்த கனி - வால் பேரிக்காய்
பிடித்த மளிகை சாமான் - வால்மிளகு
பிடித்த சினிமா பாடல் - குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்

ஜோக் 4
ஒருத்தன் காந்தி படம் போட்ட ஸ்டாம்புல எஸ்.வீ.சேகரை எச்சல் பண்ணி குடுக்க சொல்லறான்
அதுக்கு எஸ்.வீ.சேகர்: முடியாது,காந்தீஜியோட புகழ இந்த நாக்கு பாடலாம், ஆனா அவர் முதுகுல நம்ப நாக்கு படலாமா?


எஸ்.வீ.சேகர் தம்பி கிருஷ்ணமூர்த்தியும் நானும் ஒன்றாக சி.ஏ படித்தனாலும்( படிச்சதோட இல்லாம பாஸ் வேற பண்ணிட்டோம் இல்ல - அதோட கஷ்டம் தி.ரா.ச போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்)இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு பொங்கி வழிந்ததாலும், எஸ்.வீ.சேகர் நாடகங்கள் நிறையா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

Labels: , ,

3 Comments:

  • At 11:08 PM, Blogger ambi said…

    ha haaa :)))

    olden days S.vee shekar is too good.
    hope U enjoyed the TN trip.
    btw, read all your prev posts too. :)

     
  • At 11:31 PM, Blogger manipayal said…

    Hi Ambi,
    thnks for visiting my blog. Vacation Trip was wonderful but for shortage of time(just 30 days)

     
  • At 6:13 AM, Blogger Geetha Sambasivam said…

    எஸ்வீ.சேகரை இன்னும் நினைப்பு வச்சிருக்கீங்களா? செம அறுவை!

     

Post a Comment

<< Home