market passion

Friday, November 16, 2007

பெண் பார்க்கும் படலம் - Part 2

ஒரு வழியாக வத்ஸு பாடி முடித்தாள்.
சுந்தரம்: அருமையா பாடறாளே
ஜானகிராமன்: இவ மட்டும் முழு மூச்சா பாடினா
விச்சு: (மனசுக்குள்) கேக்கறவாளுக்கு மூச்சு வாங்குமோ?
ஜானகிராமன்: மேடைக்கச்சேரியே பண்ணிருப்பா.
விச்சு(மீண்டும் மனசுக்குள்) நல்ல வேளை ரசிகர்கள் இந்த இ(ம்)சை கச்சேரிலேந்து தப்பிச்சா. சும்மா சொல்லக்கூடாது ஆண்டவன் என்னமா காப்பாத்தறாரு
அப்பொழுது உள்ளிருந்து கற்பகம்: ஏன்னா, கொஞ்ஜம் இங்க வரேளா
ஜானகிராமன் உள்ளே போகிறார் வத்ஸுவும் பின்னால் போகிறாள்.
அதற்க்குள் சுந்தரம் விச்சுவிடம்: என்னடா பொண்ணு புடிச்சுருக்கா?
விச்சு: நீங்க என்னப்பா சொல்றேள்?
சுந்தரம்: எனக்கு ஓ கே டா, நல்ல குடும்பம், ஒரே பொண்ணு, என்ன, அவ உசரத்துக்கு மேல போய் 5 கட்டைல பாடறா
விச்சுவால் நம்ப முடியவில்லை. இதுவரையில் ஒரு முறை கூட சுந்தரம் இப்படி ஆன் தி ஸ்பாட் டிசிஷன் எடுத்ததில்லை. நீ என்ன சொல்லறே
விச்சு: நா பொண்ணோட கொஞ்ஜம் பேசனம்பா
அதை கேட்டு கொண்டே வந்த ஜானகிராமன் அதற்க்கேன்ன தாராளமாய் பேசலாமே, அம்மா வத்ஸு இங்க கொஞ்ஜம் வாம்மா மாப்பிள்ளை உன்னோட பேசனமாம்.
விச்சு: என்னா சார் நீங்க அதுக்குள்ளெ என்னை போய் மாப்பிள்ளைன்னு
ஜானகிராமன்: நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல்லை. எங்காத்துல எல்லாருக்கும் ஒ கே. வத்ஸு உள்பட.
வத்ஸுவும் விச்சுவும் ஒரு தனி அறைக்குள் போகிறார்கள். அங்கே....... மீண்டும் தொடரும்

Labels: , ,

2 Comments:

  • At 12:01 AM, Blogger Geetha Sambasivam said…

    ம்ம்ம்ம் நல்லாத் தான் எழுதி இருக்கீங்க, ஆனாலும், எனக்கு என்னமோ தெரியலை, உங்க போக்குலே எங்கேயோ எதுவோ இடிக்குதே? அதான் என்னனு புரியலை! சரி, விட்டுடறேன், தானே சரியாகும்னு நினைக்கிறேன். :((((

     
  • At 5:37 AM, Blogger manipayal said…

    நீங்க எத சொல்லுறீங்கன்னு புரியல்ல. ஆனா எங்க போட்டு குடுத்துடுவீங்களோன்னு டென்ஷனா இருக்கு

     

Post a Comment

<< Home